சென்னை: அடுத்த ஆண்டு ஜன.9ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலை சந்திப்போம். தொண்டர்களின் எதிர்பார்ப்பை அடுத்து இளைஞரணி பதவி விஜயபிரபாகருக்கு வழங்கப்பட்டுள்ளது. நானும், விஜயபிரபாகரும் அனைத்து தொகுதிகளுக்கும் செல்வோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜயகாந்த் சிலை திறக்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.