Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குற்ற வழக்குகள்.. தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்: அசன் முகமது ஜின்னா வலியுறுத்தல்!!

சென்னை: நீண்ட நாளாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என குற்ற வழக்குகள் தொடர்வு இயக்குனர்களிடம் குற்ற வழக்கு தொடர்வு இயக்கக இயக்குனர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தியுள்ளார். இதை தொடர்பாக அவர் கூறியதாவது; நீண்ட நாளாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும். ரிமாண்ட் தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்யும்போது ஆவணத்தை அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

அரசு வழக்குரைஞர்கள் அரசு தரப்பு சாட்சிகளை எதிர்தரப்பு குறுக்கு விசாரணை செய்யும் போது கோர்ட்டில் இருக்க வேண்டும். மீண்டும் சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும் போது அரசு குற்றவியல் வழக்குரைஞர் கோர்ட்டில் இருக்க வேண்டும். அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் இருந்து வழக்குகளில் முழுமையாக பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு வழக்குரைஞர்கள் அனைத்து நேரங்களிலும் போலீஸ் எளிதில் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.