சென்னை: குற்ற வழக்குகளில் ஆதாரமாக இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை கையாள்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் புதிய விதிகளை வகுத்து உத்தரவு அளித்துள்ளது. கோகுல்ராஜ் கொலை தொடர்பான மேல்முறையீடு வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளனர். சிசிடிவி பதிவுகள் மூலமாகவே கோகுல்ராஜ் குற்றச்சதி கொலை வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.