சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேருக்கு எதிராக ஜாமினில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமைச்செயலக நேரடி உதவிப்பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. உத்தரவை செயல்படுத்தவில்லை என தொடர்ந்த அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உத்தரவை அமல்படுத்தாவிடில் ஸ்வர்னா, மைதிலி ஐஏஎஸ் ஆஜராக வேண்டி வரும் என நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர்.