சென்னை : மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். கடந்தாண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் 2 சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தனர்.
மதபோதகர் ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
0