அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (35). தொழிலாளி. இவரது மனைவி திவ்யா(27). இவர்களுக்கு 1 ஆண் குழந்தையும், 1 பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இவர்களது வீட்டு அருகே கடந்த 7ம் தேதி இரவு கொளுத்தப்பட்ட குப்பையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது. போலீசார் விசாரணையில், திவ்யா கற்பமானதை மறைத்து வயிற்றில் கட்டி உள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்த சந்தேகம் அடைந்த மதிவாணன், குழந்தையை தூக்கி கீழே வீசியுள்ளார். குழந்தை அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்துள்ளார். இதனால், குழந்தை இறந்து விட்டது. அதன்பிறகு, இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு எரித்து உள்ளது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து மதிவண்ணன், அவரது மனைவி திவ்யா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கொன்று எரிப்பு தம்பதி கைது
0