சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு ‘சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.
இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே, சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்க சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை: தமிழக அரசு விளக்கம்
0