தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடுப்பி சாம்பார்

Advertisement

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்

புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கத்திரிக்காய் (சிறிய அளவு) - 1

உருளைக்கிழங்கு (சிறிய அளவு) - 1

வெல்லம் பொடித்தது - 1 டீஸ்பூன்

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் (நடுத்தர அளவு) - 3 அல்லது 4

தனியா - 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் ஒரு கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள் ஆகிய வற்றைச் சேர்த்து குழைய வேக விட்டு எடுக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகிய வற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். கடைசியில் கறிவேப்பி லையைப் போட்டு சற்று வதக்கி, பின்னர் அத்துடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து, வறுத்த பொருட்கள் எல்லவ ற்றையும் ஒன்றாகப் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத் தெடுத்துக் கொள்ளவும். கத்திரிக் காய், உருளைக் கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து, கரைத்து, புளித் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியை அடுப்பி லேற்றி அதில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பி த்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, காய்கறி துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து வேக விடவும். காய் நன்றாக வெந்ததும் அதில் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் உப்பு, வெல்லம் ஆகிய வற்றையும் சேர்த்து, கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்துள்ள பருப்பு, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு, தேவைப் பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

Advertisement

Related News