தேவையான பொருட்கள்.
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
பட்டை-1
லவங்கம்-1
ஏலக்காய்-2
சோம்பு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
பச்சை மிளகாய்-2
வெங்காயம்-1
தக்காளி-1
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
சோயா-1 கப்.
பட்டாணி-1 கப்.
உப்பு-தேவையான அளவு.
பேஸ்ட் செய்ய,
தேங்காய்-1கப்.
கசகசா-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
முந்திரி-10
பொட்டுக்கடலை-1/2 கப்.
செய்முறை
முதலில் கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை 1, லவங்கம் 1, ஏலக்காய் 2, சோம்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு நறுக்கிய தக்காளி 1, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது ஊறவைத்த சோயா 1 கப், பட்டாணி 1 கப் சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும். இப்போது மிக்ஸியில் தேங்காய்1 கப், முந்திரி 10, பொட்டுக்கடலை ½ கப், கசகசா 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி ஆகியவற்றுடன் தண்ணீர் சிறிது சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது இதை சோயா பட்டாணியுடன் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக சுண்டும் அளவிற்கு வேகவைத்து எடுத்தால் சுவையான சோயா பட்டாணி சால்னா தயார்.


