Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உப்பு அடை

தேவையானவை:

அரிசி மாவு-2 கப்,

ஊறவைத்து வேகவைத்த சிவப்பு காராமணி-ஒரு கைப்பிடி,

தேங்காய் பல்லு பல்லாய் நறுக்கியது- 2 டேபிள்ஸ்பூன்,

பச்சை மிளகாய்-1 பொடியாக நறுக்கியது,

கறிவேப்பிலை - 1 கொத்து நறுக்கியது.

தாளிப்பதற்கு

கடுகு-1 டீஸ்பூன்,

கட்டிப் பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு,

சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் முதலியவற்றை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு ேசர்த்து வேகவைத்த காராமணி, தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் சிறிது சிறிதாக அரிசிமாவை சேர்த்து கட்டி சேராமல் கிளற வேண்டும். வெந்த மாவை ஒரு தட்டில் மாற்றவும். மாவு நன்கு ஆறியதும் பெரிய எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து கனமாக வடை போல் தட்டி, இட்லி அவிப்பது போல் அவித்து வைக்கவும்.