Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கார்த்திகை தீப கந்தரப்பம்

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்

வெல்லம் - 1 கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

அரிசி மாவு - கால் கப்

உப்பு - ஒரு சிட்டிகை

சமையல் சோடா - 1 சிட்டிகை

ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

சுக்கு பொடி - 1 சிட்டிகை

முந்திரி, பாதம் & பிஸ்தா - 4 டேபிள் ஸ்பூன் (பொடிச்சது)

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கரைய விடுங்கள். இதற்கு பதம் எதுவும் தேவையில்லை. வெல்லம் கரைந்ததும் வடிகட்டி தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ரவையைச் சேர்த்து, அதில் ஏற்கனவே கரைத்து ஆற வைத்திருக்கும் வெல்லக் கரைசலைச் சேர்த்து அரை மணி நேரம் வரை ஊறவிடுங்கள்.ரவை நன்றாக ஊறியிருக்கும். இந்த கலவையை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு அரை கப் துருவிய தேங்காயையும் கால் கப் அரிசி மாவையும் சேர்த்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.அரைத்த மாவை ஒரு பௌலில் சேர்த்து அதில் உப்பு, சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி, சமையல் சோடா மற்றும் ஒன்றும் பாதியுமாக பொடித்த முந்திரி, பாதம் & பிஸ்தா ஆகியவற்றைச் சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.தோசை மாவு பதத்துக்கு அதிக கெட்டியாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் கரைத்து ஒரு பத்து நிமிடம் மட்டும் மூடி வையுங்கள்.ஒரு கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும் குழிக்கரண்டியால் அரை கரண்டி அளவு மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் ஊற்ற வேண்டும். 10-15 செகண்டில் அதுவே பூரி போல மேலழும்பி வரும்.நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு இரண்டு புறமும் வெந்ததும் எடுத்து விடலாம். இதேபோல எல்லா மாவையும் ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற மெத்து மெத்தென்ற கார்த்திகை அப்பம் தயார்.ஆறிய பிறகும் கூட அதே மென்மையோடு இருக்கும்.