தேவையான பொருட்கள்:
பனீர் - 200 கிராம்
பூண்டு - 10-12 பற்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.அடுத்ததாக, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மசியும் வரை வதக்கவும்.பின்னர், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கிய, சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.இப்போது, நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலக்கவும். பின்னர், 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்தால், பூண்டு பனீர் தயார்! இதை சப்பாத்தி, நான், ரொட்டியுடன் பரிமாறவும்.



