தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேங்காய் சாதம்

Advertisement

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடி செய்வதற்கு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 10 பல்

வரமிளகாய் - 2

துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

வடித்த சாதம் - 1

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் சாதத்தை வடித்து தனியாக ஒரு தட்டில் போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதே எண்ணெயில் துருவிய தேங்காயை சேர்த்து குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாகும் வரை வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காயையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.பின் அதில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.இறுதியாக சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.

Advertisement

Related News