சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மாமனாரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான கே.தசரதன் மறைவுற்ற செய்தி அறிந்து வருந்தினேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.