புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசு 9 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில்,அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் பதிவிடுகையில், கொடிய பணவீக்க விகிதத்தால் கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சம்பாத்தியத்தை பாஜ அரசு கொள்ளையடித்து விட்டது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
மேலும், பட்ஜெட்டை பாழாக்கி வாழ்க்கையை கடினமாக்கி விட்டது’’என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிடுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே பாஜ அரசின் சாதனை. இன்னும் சில நாட்களுக்கு ஒன்றிய அமைச்சர்கள் பலர் மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை குறித்து தம்பட்டம் அடிப்பார்கள்’என தெரிவித்துள்ளார்.