Tuesday, March 25, 2025
Home » கோவை வஉசி மைதானத்தில் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை

கோவை வஉசி மைதானத்தில் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை

by Suresh

கோவை: கோவை வஉசி மைதானத்தில் சிறப்பு எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (54). இவரது மனைவி கல்யாணி (54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சொக்கலிங்கம் கோவை அடுத்த கோவைப்புதூரில் குடும்பத்துடன் தங்கிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்ஐ பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சொக்கலிங்கம் வீட்டில் இருந்து தனது மனைவியின் சேலையை எடுத்து கொண்டு வ.உ.சி மைதானத்திற்கு வந்தார். அங்கு உள்ள புங்கை மரத்தில் சேலையால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து சொக்கலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், பணி சுமையா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

15 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi