சென்னை: சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை; திரையுலகம் எங்கள் நட்பு உலகம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 4 மணி காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகளுக்கு அனுமதி தரப்படும். திரைத்துறையை முடக்கவில்லை; சிறிய தயாரிப்பாளர்களை கூட அரசு ஊக்குவிக்கிறது. சினிமாவிற்கு தடை போட்டு திரையுலகின் விரோத போக்கை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.