பெய்ஜிங்: சீனாவின் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 10 வீடுகள் இடிந்து விழுந்து மண்ணில் புதைந்தன.
சாங்ஷி நகரத்தில் இரண்டு உடல்களும், கிங்யாங் கிராமத்தில் இரண்டு சடலங்களும் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. மேலும் நிலச்சரிவில் சுமார் 19 பேர் மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகின்றது. அவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.