சென்னை: பெங்களூருவைச் சேர்ந்த சந்திரசேகரனின் மனைவி பவித்ரா தனது 6 வயது மகள், 3 வயது மகன் ஆகியோரை அழைத்துக்கொண்டு 2019ல் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். குடும்ப பிரச்னை மற்றும் மன அழுத்தம் காரணமாக மகளை கொலை செய்த பவித்ரா, மகனை கொலை செய்வதற்காக பிளேடால் கழுத்தில் அறுத்ததுடன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பிறகு தாயும் மகனும் உயிர் பிழைத்தனர். சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச். முகமது பாரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பவித்ராவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.