மதுரை: மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பள்ளி உரிமையாளர் திவ்யா, பணியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. தொட்டியில் தவறி விழுந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது.
மதுரையில் நீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி: 4 பேர் கைது
0