சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்
டெல்லி: சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்த ஆவணங்களை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிறுவன் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
