சென்னை :தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க புதிதாக 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு…
*பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, சென்னை பகுதிகளில் 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
*ரூ.3,750 கோடியில் நகர்ப்புற சாலைகள் மேம்படுத்தப்படும். 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
*ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்.