ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மாநிலத்தில் கொண்டு செல்லப்படும் நிலக்கரிக்கு டன்னுக்கு ரூ-25 வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு ஜூன் வரைக்கும் ரூ.540கோடி ரொக்கம் வசூலிக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது.
இந்த மோசடி வழக்கில் விஷ்னோய், சவ்ராசியா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் அலுவலகத்தின் முன்னாள் துணை செயலாளர் உட்பட 6 பேர் ராய்ப்பூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.