Thursday, June 19, 2025
Home செய்திகள்Banner News சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் மோதி 13 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் மோதி 13 பேர் உயிரிழப்பு

by Arun Kumar

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். லாரி மீது டிரெய்லர் மோதியதில் 9 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சட்டவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ராய்ப்பூர்- பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பனார்சி கிராமத்தில் திருமண விழாவில் கலந்து கொண்டு, இரவு 12.15 மணியளவில் மினி லாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வேகமாக வந்த டிரெய்லருடன் மோதியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 9 பெண்கள், 2 சிறுமிகள், 1 சிறுவன் மற்றும் 6 மாதக் குழந்தை ஆகியோர் அடங்குவர். மேலும் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு கரௌரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் உள்ளுர்வாசிகளுடம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல பயணிகள் சிதைந்த வாகனத்துக்குள் சிக்கியிருந்ததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi