சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் காவல்துறை இயக்குநர்கள், காவல்துறை கூடுதல் இயக்குநர்கள், காவல் துறை மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் காவல் துறையின் செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவது, ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
0