சென்னை: சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை, திறமையான நிர்வாகம், மக்களுக்கு மையப்படுத்தப்பட்ட சேவையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பித்தல், ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், கட்டணம் செலுத்தலாம். இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
0