சென்னை: சென்னையில் மேலும் 2 இடங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இன்று போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒத்திகை மட்டுமே என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. போர்க்கால ஒத்திகை குறித்து மக்கள் பதற்றமோ, அச்சமோ கொள்ளத் தேவை இல்லை பேரிடர் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
சென்னையில் மேலும் 2 இடங்களில் இன்று போர்க்கால ஒத்திகை: பேரிடர் ஆணையம் தகவல்
0