சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து முதல்வர் ஆய்வு நடத்தி வருகிறார். பேப்பர் மில்ஸ் சாலையிலுள்ள தணிகாச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியையும் ஆய்வு செய்கிறார். பணிகளை வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன் முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.