சென்னை; மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 07 வழித்தட எண்களை மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 01.05.2025 முதல் இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளது.
மா.போ.கழகம் பயணிகள் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு பேருந்து வழித் தடத்திற்கும் ஒவ்வொரு தட எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 07 வழித்தட எண்களை கீழ்கண்ட அட்டவணையில் உள்ளவாறு மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 01.05.2025 முதல் இயக்கப்பட உள்ளது என மா.போ.கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.