சென்னை: சென்னையில் பல்வேறு கோட்டங்களில் ஜூன் 13-ல் காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர், கே.கே.நகர், வியாசர்பாடியில் உள்ள கோட்ட அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று மேற்பார்வை பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்.