சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில் 5ஆம் தேதி கேஸ் கசிந்த விபத்தில் தந்தை, மகள், பேரன் என 3 பேர் உயிரிழந்தனர். முனுசாமி என்பவரும் அவரது மகள் சாந்தி, பேரன் ஹரிஹரன் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பற்றியதாக உயிரிழக்கும் முன்பு எழும்பூர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருந்தனர். பலத்த தீக்காயமுற்ற ராணி என்பவருக்கு கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கேஸ் கசிவால் தீ விபத்து – 3 பேர் பலி
0