சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழிக்கு புதிதாக அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் கனிமொழியை அமர்த்தி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்பி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் உடனிருந்தனர்.