சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால் பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று ஒரே நாளில் புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டனர். அதேபோல் 6 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்துமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
Advertisement


