சென்னை: இன்று சென்னையில் இருந்து கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. பயணிகள் எந்தவித சிரமமுன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக முக்கிய இடங்களுக்கு இன்று முதல் 500 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை, நாளை மறுநாள் மற்றும் சுதந்திர தினமான ஆக.15-ல் விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.