சென்னை: சென்னை திருவேற்காடு அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் உணவு உண்ட மாணவர்களுக்கு மயக்கம் அடைந்துள்ளனர். பல்லி விழுந்த உணவு உண்டதால் சுமார் 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவில் பல்லி இருந்த சம்பவம் குறித்து வட்டாட்சியர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.