சென்னை: சென்னை – சேலம் இடையே இயக்கப்பட்டு வந்த விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே சென்னை – சேலம் இடையே விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் தினசரி சேவையை தொடங்க முன்வந்துள்ளது.
சென்னை – சேலம் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்துள்ளது. சென்னையில் இருந்து காலை 11.20க்கு புறப்படும் விமானம் பகல் 12.30க்கு சேலம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.