Thursday, June 19, 2025
Home செய்திகள்Banner News சென்னை திரும்பும் பயணிகளுக்கு அதிர்ச்சி: உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு

சென்னை திரும்பும் பயணிகளுக்கு அதிர்ச்சி: உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு

by Lavanya

சென்னை: மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவையிலிருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வெளியூர் சென்றவர்கள் விமானங்களில் திரும்புவதால் உள்நாட்டு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மதுரை- சென்னைக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.4,542. இன்று கட்டணம் ரூ.18,127-ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் ரூ.4.214ஆக இருந்த நிலையில் ரூ.17,401 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி- சென்னை இடையே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.2,334. இன்றைய தினம் கட்டணம் ரூ.9,164 ஆக உயர்ந்து காணப்படுகிறது. இதனால், விமானப் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பல மடங்கு அதிக விமான கட்டணம் கொடுத்து சொந்த ஊர்களில் இருந்தும் சுற்றுலா தலங்களில் இருந்தும் பயணிகள் பயணித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi