Thursday, December 7, 2023
Home » சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணங்களை வெளியிட்டது தெற்கு ரயில்வே

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணங்களை வெளியிட்டது தெற்கு ரயில்வே

by Arun Kumar

சென்னை: சென்னை – நெல்லை இடையே இயக்கப்படவிருக்கும் வந்தே பாரத் ரயில் கட்டணங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி சொகுசு வகுப்பு கட்டணம், சேர் கார் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உணவு, ஜிஎஸ்டி, முன்பதிவு என அனைத்தும் சேர்த்து, ஏசி சொகுசு வகுப்புக் கட்டணம் ரூ.3,025 ஆகவும், சேர் கார் கட்டணம் ரூ.1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முன்பதிவு கட்டணம், உணவு, ஜிஎஸ்டி என அனைத்தும் அடங்கும்.

திருநெல்வேலி- சென்னை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. குறித்த நேரத்தில் இலக்கை அடைந்ததால் ரயில்வே பணியாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். திருநெல்வேலி-சென்னை இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 24) காலையில் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், சென்னையில் இருந்து சோதனை ஓட்டமாக திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை வந்து சோ்ந்தது.

தமிழகத்தில் சென்னை-மைசூரு, சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி-சென்னை இடையே ஞாயிற்றுக்கிழமை (செப். 24) முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கவுள்ளது. அதைத் தொடா்ந்து ரயில் பெட்டிகள் – வேகன்கள் தலைமைப் பொறியாளா் முகுந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி-சென்னை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையின் தொடக்க விழா செப். 24ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில், சென்னை- திருநெல்வேலி இடையிலான 650 கி.மீ. தொலைவை 7.50 மணி நேரத்தில் கடக்கும். இன்னும், இந்த ரயிலின் வேகத்தை 130 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ரயிலில் 52 போ் வரை பயணிக்கக்கூடிய ஒரு ‘எக்ஸிகியூட்டிவ்’ பெட்டி உள்ளிட்ட 8 பெட்டிகள் உள்ளன. மற்ற 7 பெட்டிகளிலும் தலா 76 போ் பயணிக்கலாம். ரயில் என்ஜின் உள்ள பெட்டியிலும் 46 போ் வரை பயணிக்க முடியும். தற்போதைய நிலையில் 540 போ் வரை இந்த ரயிலில் பயணிக்கலாம்.

இது, விருதுநகா், மதுரை , திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தொடக்க விழா நடைபெற்றாலும், திங்கள்கிழமையில் இருந்துதான் முறைப்படி இயக்கப்படுகிறது. ரயிலில் ஒலிப் பெருக்கி அறிவிப்புகள் இடம்பெறும். உணவுப் பரிமாறப்படும். ஊனமுற்றோருக்கான வசதிகள், இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்றாா்.

திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையை சென்றடையும். மறு மாா்க்கத்தில் சென்னையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வாரத்தில் 6 நாள்கள் இந்த ரயில் இயங்கும்; வியாழக்கிழமை மட்டும் இயக்கப்படாது என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?