Wednesday, April 24, 2024
Home » சென்னை தியாகராயநகரில் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

சென்னை தியாகராயநகரில் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

by Lavanya

சென்னை: சென்னை தியாகராயநகரில் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இயங்கி வருகிறது லைகா நிறுவனம், உச்ச நட்சத்திரங்களாக திகழும் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பலரின் திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

கோலமாவு கோகிலா, வடசென்னை, ரஜினியின் 2.0, சிவகார்த்திகேயன் நடித்த டான், தர்பார், செக்கச் சிவந்த வானம், வடசென்னை உள்ளிட்ட பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்தது. மேலும் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்து உள்ளது. இந்நிலையில் சட்ட விரோதமான பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் துணை ராணுவத்தின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

four − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi