செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனை வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டார். 50 வயதான தம்பிரான் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு வரை மூன்றாவது மாடியில் உள்ள வார்டில் தம்பிரான் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த தம்பிரான், இன்று மருத்துவமனை வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தம்பிரான் தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனை வளாகத்தில் சடலமாக மீட்பு
92