அறநிலையத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பு சீர்வரிசைகளுடன் 34 ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மங்கல நாண் வழங்கி 34 ஜோடிகளுக்கான திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். புதுமணத் தம்பதிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த திருமணம், சென்னை ராஜா அண்ணாமலை புரம் பசுமை வழிச்சாலை ரெயில் நிலையம் அருகில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.












