சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளியை கிளப்பிய, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த நிலையில், விசாரணையில் புரளி என தெரியவந்தது.