குப்பையில் வீசப்பட்ட ஆண் குழந்தை சடலம்
சோழிங்கநல்லூர், நவ.15: ஈச்சங்காடு சிக்னல் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே, நேற்று தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பிளாஸ்டிக் பையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து...
ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.27 லட்சம்
காஞ்சிபுரம், நவ.15: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில், ரூ.27 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். புகழ் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு உள்ளூர் வெளியூர் என நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, செல்வது வழக்கம். இவ்வாறு, கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கைகளை...
செய்யூர் அடுத்த இசிஆர் சாலையில் நிழற்குடை இல்லாததால் பஸ் பயணிகள் தவிப்பு
செய்யூர், நவ.13: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலை எல்லையம்மன் கோயில் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. செய்யூர், வடக்கு மற்றும் மேற்கு செய்யூர், புத்தூர், ஓதியூர், நைனார் குப்பம், முதலியார் குப்பம், இரும்பேடு, அம்மனூர் பகுதிகளில் இருந்து வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பேருந்து...
மைசூர் வனவியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒட்டகச்சிவிங்கி, காட்டுக்கழுதை
கூடுவாஞ்சேரி, நவ.13: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், ஒட்டகச்சிவிங்கி மற்றும் காட்டுகழுதை கொண்டுவரப்படுகிறது. அதற்கு மாற்றாக சிங்கவால் குரங்குகளை மைசூர் வனவியல் பூங்காவிற்கு அனுப்ப வண்டலூர் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி,...
1670-1790ம் ஆண்டு வரையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான தொகுப்புகளை புத்தாக்கம் செய்து வெளியீடு: தமிழ்நாடு ஆவண காப்பகம் தகவல்
தாம்பரம், நவ. 13: கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் 1670 முதல் 1790ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான 35 உள்ளடக்கத் தொகுப்புகளை புத்தாக்கம் செய்து அதன் வலைதளத்தில் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு...
சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு
குன்றத்தூர், நவ.12: சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு மீண்டும் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி நடப்பாண்டில் பெய்த வடகிழக்கு பருவமழையால் 73 சதவீதம் நிரம்பியது. சோழவரம் ஏரிக்கரைகள் பலப்படுத்தும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் 73 சதவீதம் தண்ணீர்...
ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் விமான சேவை பயிற்சி: காஞ்சி கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம், நவ.12: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் விமான சேவை பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, பல்வேறு...
அரசு அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம், 6 சவரன் திருடிய 2 பேர் கைது
தாம்பரம், நவ.12: குரோம்பேட்டை, சோழவரம் நகர், தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் மணவாளன் (70), ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு ஊழியர். இவர், தனது மனைவியுடன், பெங்களூருவில் உள்ள மகள் வீட்டில், கடந்த ஜூலை மாதம் முதல் தங்கி இருந்துள்ளார். அங்கிருந்து, கடந்த 2ம் தேதி வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.10 லட்சம்,...
இருக்கை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத வாலாஜாபாத் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி
வாலாஜாபாத், நவ.11: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். மேலும் வாலாஜாபாத் அருகில் உள்ள...


