சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்தது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “வருகின்ற மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பு என்ற அறிவிப்பு ‘இந்தியா’ கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி; ஜாதிவாரி கணக்கெடுப்பை தவிர்ப்பதற்கான ஒன்றிய அரசின் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்தது. பிரதமரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து வலியுறுத்தினேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்தது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0