டெல்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பிரதமர் தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2021 ல் நடக்கவேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்..!!
0