பாகு: ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவின் பிரக்ஞானந்தா – நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் மோதிய 2வது கிளாசிக் ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதையடுத்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க இருவரும் ரேப்பிட் முறை டை பிரேக்கரில் இன்று மோதுகின்றனர். அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரையிறுதியில் அமெரிக்க வீரர் ஃபேபியா கருவானாவை (2வது ரேங்க்) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்த சென்னை வீரர் பிரக்ஞானந்தா (18 வயது), பரபரப்பான பைனலில் நம்பர் 1 வீரர் கார்ல்சனுடன் (31 வயது) மோதி வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த முதல் கிளாசிக் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2வது கிளாசிக் ஆட்டம் நேற்று நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 30 நகர்த்தல்களுக்குப் பிறகு டிராவில் முடிந்தது. 2 கிளாசிக் ஆட்டங்களும் டிரா ஆனதை அடுத்து, உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இரு வீரர்களும் இன்று ரேப்பிட் முறையில் டை பிரேக்கர் ஆட்டங்களில் மோத உள்ளனர்.