மதுரை: மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சகோதரர்கள், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த விவகாரம் காரணமாக போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது. கீரைத்துறை பகுதியில் கடந்தாண்டு 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், சகோதரர்களான பாண்டியராஜன் (23), பிரசாந்த் (22) மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) மூவரும் கைதாகினர். வழக்கு விசாரணை முடிந்து, 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
மதுரையில் கஞ்சா வழக்கில் சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு
0