கொடுமுடி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியனரூ. 48 லட்சத்துக்கு ஏலம் போனது. கொடுமுடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில், தேங்காய் காய்கள் 14,924 வரத்தாகின. இதன் மொத்த மதிப்பு ரூ.1,07,430. இது கிலோ ஒன்றுக்கு குறைந்த விலையாக ரூ.17.15 க்கும், அதிக விலையாக ரூ.23.05க்கும், சராசரி விலையாக ரூ. 21.15 க்கும் ஏலம் போனது.
கொப்பரை தேங்காய் மூட்டைகள் 407 வரத்தாகின. இதன் மதிப்பு ரூ.13,21,043. இதில், கிலோ ஒன்றுக்கு முதல் தரம் குறைந்த விலையாக ரூ.73.39 க்கும், அதிக விலையாக ரூ.81.19க்கும், சராசரி விலையாக ரூ.79.89 க்கும் ஏலம் போனது. இரண்டாம்தரம் குறைந்த விலையாக ரூ.60.92க்கும், அதிக விலையாக ரூ.77.06 க்கும், சராசரி விலையாக ரூ.71.60 க்கும் ஏலம் போனது.
எள் மூட்டைகள் 325 வரத்தாகின. இதன் மதிப்பு ரூ.33,79,236. இதில், கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு குறைந்த விலையாக ரூ. 134.42 க்கும், அதிக விலையாக ரூ.145.49 க்கும், சராசரி விலையாக ரூ.142.99 க்கும் ஏலம் போனது. சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு குறைந்த விலையாக ரூ.135.99 க்கும், அதிக விலையாக ரூ.148.99 க்கும், சராசரி விலையாக ரூ.143.99 ஏலம் போனது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா முன்னிலையில் மொத்தம் ரூ.48,07,709க்கு விற்பனை நடைபெற்றது.