சென்னை: பாமக தலைவர் அன்புமணி தனது டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை பெரு நிறுவனங்களால் தாங்கிக் கொள்ள முடியும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் இந்தக் கட்டண உயர்வை கண்டிப்பாக தாங்கிக் கொள்ள முடியாது.இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அது எந்த வகையிலும் உதவாது.
டிடிவி தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்: தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதை திரும்ப பெற வேண்டும்.