Sunday, June 22, 2025
Home செய்திகள்Showinpage தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த BSF வீரர் பூர்னப் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைப்பு!

தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த BSF வீரர் பூர்னப் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைப்பு!

by Francis

தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த BSF வீரர் பூர்னப் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏப்ரல் 23ம் தேதியன்று பஞ்சாப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த பூர்னப் குமார் ஷா தவறுதலாக பாகிஸ்தானிற்குள் நுழைந்தார். 20 நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக பூர்ணப் குமாரை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது. வாகா அட்டாரி எல்லை வழியாக BSF வீரர் பூர்னப் குமார் ஷா இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை ஒன்றிய அரசு எடுத்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவரை எல்லை தாண்டி வந்ததாக கூறி பாகிஸ்தான் படையினர் கைது செய்தனர்.

சுமார் 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் பூர்ணம் குமார் ஷாவை மீட்பதற்காக ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. அதே சமயம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. அதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

பின்னர், நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் தாக்குதல் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சுமார் 20 நாட்களுக்கும் மேலாக பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தனது கணவரை மீட்டு, தனது குங்குமத்தை மீட்டுத் தருமாறு எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷாவின் 7 மாத கர்ப்பிணி மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய பூர்ணம் குமார் ஷா தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi